Thursday 8 August 2013

தலைவா விமர்சனம்

வணக்கம் நண்பர்களே,

படத்தில குத்து டான்ஸ் இல்ல, பறந்து பறந்து அடிக்கிற பைட் இல்ல. வில்லன பாத்து கண்ணு சிவக்க பஞ்ச் டைலாக் பேசல அப்பிடி ஒரு விஜய் படத்த உங்களால கற்பனை பண்ண முடிஞ்சா அது நம்ம தலைவா. (இட் இஸ் மெடிகல் மிராக்கில்)

1988 ஆம் ஆண்டு படம் ஆரம்பிச்சு. 2013 இல் ஆஸ்திரேலியாவில் ஹீரோ என்ட்ரி “தமிழ் பசங்க”ன்னு கியூட்டா ஒரு டான்ஸ். அப்புறம் சந்தானம் அமலாபால்ன்னு காதல் கதை நகர இடையில நம்ம சாம் அன்டர்சன் கூட டான்ஸ் பெர்போம் பண்ணி காட்டுறாரு. அப்பிடியே கமராவ தூக்கிகின்னு வந்து மும்பைல வைச்சு யார் சத்தியராஜ்ன்னு பில்ட் அப் குடுக்கிறாங்க. மனுஷன் நடிப்புல பிச்சு உதறி இருக்காரு, இதுக்கு இவர விட்டா வேற சாய்ஸ் இல்ல. அப்புறமா சூப்பர் டுவிஸ்ட்டொட இண்டர்வல் விட்டாங்க. பாதிப்பேர் ஸ்க்ரீன விட்டு கண்ண எடுக்கல அப்பிடி ஒரு டேர்னிங்!! கத மொத்தமா முடிஞ்சு போற மாதிரி !!! சூப்பர்னா!!!

அதுக்கப்புறமா தான் திரைக்கதையில சனி பூந்திச்சு. நம்ம வேட்டைக்காரன், பகவதி படங்கள போல ஒரு பாட்டுல தலைவன் ஆகிடுராரு. “நாயகன்” கமல் மாதிரி “நாலு பேருக்கு நன்மை செய்யணுன்னா எதுவுமே தப்பில”ன்னு ஏதேதோ பண்ணுறாரு. ஏ.எல்.விஜயோட திரைக்கதைல தீய வைக்க சீனுக்கு சீன் கோடிநேசன் இல்ல, தக்காளி!! லாஜிக் சுத்தமா இல்ல,அமலாபாலுக்கு சீன் பெருசா இல்ல ,சந்தானம் ஒன்னு ரென்னு சீனுக்கு மட்டும்......கடைசி கிளைமாக்ஸ்ல ஒரு “ஒன்னரைனா” டுவிஸ்ட்!!!! வழக்கம் போல பாழடைஞ்ச பங்களாவுல ஒரு பைட்டு!!!! வில்லன் விஜய்ய கத்தியால குத்தின அப்பறமாவும் எழும்பி வந்து வில்லன கொல்லுறது.!!! இதுக்கு திரைக்கதை எழுத இன்னாத்துக்கு ஒரு டைரக்டர். நம்ம குப்பத்து குட்டி பசங்க போதும்.

பின்னணி இசை பல இடங்களில் ஹாரிஸ்ஜெயராஜ் , ஏ.ஆர்.ரகுமானின் சாயல்ன்னு டீசண்டா சொல்லலாம் இல்லாங்காட்டி ஆட்டையப்போட்டதுன்னும் சொல்லலாம். பாடல்கள் , எடுக்கப்பட்ட விதம் சூப்பர் முக்கியமா “வாங்கண்ணா வணக்கங்கண்ணா” பாடல் கொரியோகிராப் சூப்பரோ சூப்பர் (நம்ம ஜிவி என்ரி எல்லாம் குடுத்து டான்ஸ் ஆடுறாரு. ஆடும் போது காமர்ராவ பாத்து ஆடுங்க பாஸ்). ஒளிப்பதிவு ,வசனம் (ஒரே வசனம் ஒம்போது தடவ வாறது மட்டும் ரொம்ப கொடும “ஒருதடவ நம்ம கைக்கு கத்தி வந்திடுச்சினா................” முடியல!!) கதைக்களம் எல்லாம் சூப்பர். இரண்டாம் பாதி திரைக்கதை மட்டும் ஷூவுல ஒட்டின பபுள் கம் மாதிரி ஒரே இள்ள்ள்ள்ள்ள்ளுவை!!!

படம் மூணு மணித்தியாலம் (மூணு மணுத்தியாலம் தியட்டர்ல இருக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம் bro). மொத்த படத்தில் இரண்டாம் பாதி திரைக்கதையை தவிர எதையும் மொக்கைன்னு சொல்ல முடியாத படம் !! (படத்தோட முதுகெலும்பே திரைக்கதைதான் அப்புறம் என்ன!) முன்பாதி மரண மாஸ் பின்பாதி புஸ்ஸ்ஸ்!!!!!
மொத்தத்தில் “தலைவா” விஜய் ரசிகர்களுக்கு வெற்றிவீரன்!!! சாதா ரசிகர்களுக்கு சும்மா டைம் பாஸ்!!


பி.கு:: இந்த விமர்சனம் யாரையாச்சும் காயப்படுத்தியிருந்தா என்னைய திட்டாதீங்க !! படம் எடுத்த அந்த டைரக்டர் பயல திட்டுங்க! "நோங்க தின்னவன் ஓடிபுட்டான் அத நொண்டி தின்னவன் மாட்டிகிட்டான்" அந்த கதையால்ல இருக்கு!!!

4 comments:

  1. entha theatre la pathinga boss!!!!

    ReplyDelete
  2. apppppparum enna ithuku vimarsanam pannenga boss

    ReplyDelete
  3. yow naanga padatha parthu therinjikkarom ne kadaya gali pannittu kilambu romba athigama pesura

    ReplyDelete
  4. vijay anna kavutudare.. thuppaki mass thalaiva tholaaa.. i wan thulata manamum thulum n gilli style vj anna pls..

    ReplyDelete